ஹப்புத்தளை பகுதியில், சுமார் 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான தேயிலைத் தூளுடன் இருவரை ஹப்புத்தளை பொலிஸார் இன்று (11) காலை கைதுசெய்துள்ளனர்.
மேற்படிப் பிரதேசத்திலுள்ள தேயிலைத் தொழிற்சாலையொன்றின் பெயரை தவறாகப் பயன்படுத்தி தேயிலைத் தூள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை இன்று(14) நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.