ஆசியா பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 11 வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் அடங்கிய, கூட்டமைப்பில் இணையப் போவதாக, ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் எனப்படும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன், கடந்தாண்டு, ஜனவரி 31-ல் முறைப்படி வெளியேறியுள்ளது. அதைத் தொடர்ந்து, மற்ற நாடுகளுடன், தொழில் மற்றும் வர்த்தக உறவுக்கான முயற்சிகளில் பிரிட்டன் ஈடுபட்டு வருகிறது. இந்திய அரசுடனும் பேச்சு நடத்தி வருகிறது.
இந்நிலையில் 11 நாடுகள் அடங்கிய, சி.பி.ஐ.பி.பி., எனப்படும், டிரான்ஸ் பசிபிக் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பில் இணைவதற்கு, பிரிட்டன் விண்ணப்பித்துள்ளது. இதை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியா, புருனே, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகியவை, இந்த கூட்டமைப்பில் உள்ளன