சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட 13,000 சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கண்டி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன்இ இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் முன்னெடுத்து வருகிறது.