14ஆம் திகதியை விசேட தினமாக அறிவித்தது தேர்தல் ஆணைக்குழு

0
63

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய விசேட தினமாக கருதி எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள் அட்டைகள் எதிர்வரும் 14ஆம் திகதி வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.