1,500 தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மூடல்!

0
201

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் காரணமாக உள்நாட்டில் உள்ள ஆயிரத்து 500 தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என தெங்கு மற்றும் தெங்கு சார்ந்த உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் வருடாந்த தேங்காய் எண்ணெய்க்கான கேள்வி, 2 இலட்சத்து 40 ஆயிரம் மெற்றிக் தொன்னாகும்.
இந்தநிலையில், ஒரு கோடியே 77 இலட்சம் கிலோ கிராம் அளவில் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாகவும், இதற்காக 7 ஆயிரத்து 891 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ள தெங்கு மற்றும் தெங்கு சார்ந்த உற்பத்தியாளர்கள் சங்கம் இதனால் தமது தொழிற்துறை பாரியளவில் பாதிப்படைந்துள்ளதாக, தெரிவித்துள்ளது.