16 ஆண்டுகளுக்கு பின்னர் ஸ்ரீ தலதா வழிபாடு இன்று ஆரம்பம் ; ஜனாதிபதி பங்கேற்பு!

0
28

16 ஆண்டுகளுக்கு பின்னர்   ஸ்ரீ தலதா வழிபாடு  வெள்ளிக்கிழமை (18) ஆரம்பமாகவுள்ளது. ஆரம்ப நிகழ்வு இன்று  பிற்பகல் 12.30 மணியளவில்  ஆரம்பமாவதுடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்துக்கொள்ளவுள்ளார்.

மேலும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளவுள்ளதுடன், அவர்கள் கொழும்பில் இருந்து விசேட புகையிரதம் ஊடாக கண்டி செல்வதற்கு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைய மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் அனுசரணையுடன் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின்  தியவடன நிலமேவின் வழிகாட்டலின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்ரீ தலதா வழிபாடு  வெள்ளிக்கிழமை (18)  முதல்  எதிர்வரும்  ஞாயிற்றுக்கிழமை  (27) வரை 10 நாட்களுக்கு நடைபெறும்.

ஆரம்ப நாளான இன்று பிற்பகல்  3 மணிமுதல் மாலை 5 மணிவரையிலும் பக்தர்களுக்கு  ‘ஸ்ரீ தலதா’ புனித தந்ததாதுவை வழிபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதுடன்,  சனிக்கிழமை (19) முதல் தினசரி பிற்பகல் 12 மணிமுதல் மாலை 5 மணிவரை  புனித தந்ததாதுவை வழிபட அனுமதியளிக்கப்படும்.