161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நாளை

0
3

161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து, தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

எஞ்சியுள்ள 178 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அனுப்பி வைக்குமாறு, தொடர்புடைய கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.