வடக்கு காசா முனை பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் போர் விமானங்களின் உதவியுடன், ஹமாஸ் போராளிகளின் 150 பதுங்கு குழிகளை இலக்காக கொண்டு அதிரடி தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இஸ்ரேல் தாக்குதல்களால் இணைய சேவைகள் மற்றும் தொலைபேசி சேவைகளுக்கு ஏற்பட்ட இடையூறுகளால் காசாவில் இருந்து பலஸ்தீனம் சார்ந்த அறிக்கைகள் எதுவும் அதிகம் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து இரவு முழுவதும் காசா முனை பகுதியில் இஸ்ரேல் படைகளுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன என தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.