2 புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து!

0
72

இந்தியாவில் இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த கோர விபத்து இன்று (17) காலை மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

புகையிரத சமிஞ்சை ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும்இ இருபத்தைந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

அஸ்ஸாமில் உள்ள சில்சாரில் இருந்து கொல்கத்தாவில் உள்ள சீல்டாவுக்கு ரங்கபாணி நிலையம் அருகே செல்லும் எக்ஸ்பிரஸ் தொடருந்துஇ பின்னால் வந்த சரக்கு தொடருந்துடன் மோதியதில் எக்ஸ்பிரஸ் தொடருந்தின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டுள்ளது.

இதற்கிடையில்இ மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு விரைவாக அழைத்துச் சென்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடதக்கது.