30 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

20 புகையிரதங்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தம்

20 புகையிரதங்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. என்ஜின் ஓயில் மற்றும் உதிரிப்பாகங்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டின் காரணமாகவே 20 புகையிரதங்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் வழக்கமான நேர அட்டவணையின்படி இயங்கும் புகையிரதங்களில் அதிக எண்ணிக்கையான பயணிகளை ஏற்றிச் செல்லவேண்டியுள்ளதாக புகையிரத பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். இன்ஜின் ஓயிலை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு போதுமான நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்றும், புகையிரத பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles