2020 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வழக்கு, டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர்

0
180

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்பான 4 கிரிமினல் குற்றச்சாட்டுகளில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர் என்றும், அடுத்த விசாரணை ஓகஸ்ட் 28ஆம் திகதியன்று நடைபெறும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, டிரம்ப் மீது வழக்கு தொடுக்க அனுமதி அளித்தது.

அதன்பேரில் நாட்டை ஏமாற்ற முயன்றது, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறு செய்ய முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு டிரம்புக்கு வொஷிங்டன் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது.

இந்நிலையில், வொஷிங்டன் டி.சி.நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று ஆஜரானார்.

விசாரணையில், 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை மாற்றி அமைப்பதற்கான தனது முயற்சிகள் தொடர்பான 4 கிரிமினல் குற்றச்சாட்டுகளில் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஒகஸ்ட் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், ‘இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும், ஒரு அரசியல் எதிரியை துன்புறுத்துவதாகும்.
இது அமெரிக்காவில் ஒருபோதும் நடக்கக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.