நாளை ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை, பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள்திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை நாடு முழுவதிலும் ஆரம்பமாகவுள்ளது. பரீட்சை நடத்துவதற்கு தேவையான பணியாளர் தயார் படுத்தப்பட்டுள்ளதுடன், முதல் 6 நாட்களுக்கு தேவையான வினாத்தாள்கள் முதலில் விநியோகிக்கப்படவுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த.உயர்தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்
0
135