10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இடம்பெற்ற வருகின்றது.
இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் போட்டிகளில் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இதையடுத்து மிகுதியாக ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகின்றது.
இதில் அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்துக்கு அதிக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று இடம்பெறும் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன.
தென்னாப்பிரிக்கா ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.
ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்காவை படுதோல்வி அடைய செய்ய வேண்டும். அவ்வாறு நடந்தால் ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புள்ளது.
ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தால் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு முடிந்துவிடும். குறித்த போட்டி பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.