2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை 2025 நவம்பர் 10 முதல் டிசம்பர் 5, வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி அறிவித்துள்ளார். இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரியில் நடைபெறும். பரீட்சைகள் விண்ணப்ப காலக்கெடு மற்றும் நடைமுறைகள் தொடர்பான கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது