ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முதலில் நாடு மிஞ்ச வேண்டும் என்றும் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு பதிலை பெற்றுக்கொடுப்பதற்கு 225 உறுப்பினர்களாலும் முடியாமல் போனதாகவும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் கட்சி, அரசியல், மத பேதங்களை மறந்து தேசிய ரீதியில் தேசிய கொடியின் கீழ் ஒன்றிணைந்து தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசாங்கத்தின் தலைவர்களுக்கு கூறுவதற்காக ஓரணியில் ஒன்றிணைந்துள்ளனர்;.
துரதிஷ;டவசமாக இந்நாட்டில் பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஓரணியில் திரண்டு நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு பதிலை பெற்றுக்கொடுக்க முடியாமல் போயுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.