24 மணி நேரத்தில் 161 பேருக்கு டெங்கு

0
91

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 161 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த 20 நாட்களில் 2,044 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதேவேளை, மே மாதத்தில் 2,647 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

2024 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 26,964 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

அவர்களில், அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். 

இவ் வருடத்தில் டெங்கு  நோயினால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.