27,500 லீற்றர் தேங்காய் எண்ணெய்யுடன் இரு பவுஸர்கள் பறிமுதல்

0
397

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய நச்சு இரசாயன பதார்த்தம் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 27,500 லீற்றர் தேங்காய் எண்ணெய் கொண்ட இரு பவுஸர்களை தங்கொட்டுவ பகுதியில் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

119 என்ற அவசர எண்ணுக்கு நேற்று இரவு வந்த அழைப்புக்கு இணங்க பொலிஸார் முன்னெடுத்த விரைவான நடவடிக்கையின்போதே இந்த பறிமுதல் இடம்பெற்றது.
இதன்போது இரு வாகனங்களின் சாரதிகளையும் பொலிஸார் கைதுசெய்தனர்.

சந்தேக நபர்கள் 25 ஆம் திகதி ராமமையிலுள்ள ஒரு கிடங்கிலிருந்து இந்த தேங்காய் எண்ணெய்யை இரு பவுஸர்களினூடாக கொண்டு வந்திருந்ததுடன், தங்கொட்டுவ பகுதியில் அமைந்துள்ள ஆலையில் வைத்து குறித்த எண்ணெய் பவுஸர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.