28 வருடங்குளுக்கு பின்னர் மரண தண்டனை

0
126
சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 28 வருடங்குளுக்கு பின்னர், ஒரு கொலை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி அம்பலாங்கொட புகையிரத கடவைக்கு அருகில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்றதாக சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த சம்பவம் தொடர்பான வழக்கு பலப்பிட்டி மேல் நீதிமன்றத்தால் பிரதான குற்றவாளிகள் இன்றி நீண்ட நேரம் பரிசீலிக்கப்பட்டதையடுத்து, நீதிமன்றம் நேற்று தீர்ப்பை வழங்கியது.எனவே, இரண்டாவது குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் தற்போது வெளிநாட்டில் இருப்பதால், அவர் கைது செய்யப்பட்ட நாள் முதல் நீதிமன்ற உத்தரவு அமலுக்கு வருகிறது.குற்றம் சாட்டப்பட்டவர் 52 வயதான அம்பலாங்கொடையைச் சேர்ந்தவராவார்.