3 ஆவது ரி20 போட்டியில் தொடரை கைப்பற்றிய சிம்பாவே அணி!

0
35

அயர்லாந்து கிரிக்கெட் அணி சிம்பாப்வேயில் 3 ஒருநாள் மற்றும் 3 ரி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் அயர்லாந்தும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் சிபாப்வேவும் கைப்பற்றின.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான ரி20 தொடர் நடைபெற்று வருகிறது .

முதல் ரி20 போட்டி மழையால் ரத்தான நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2 ஆவது ரி20 போட்டியில் சிம்பாப்வே 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது ரி20 போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணியின் அணித்தலைவர் பவுல் ஸ்டேர்லிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சிம்பாப்வே அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. மழை காரணமாக இந்த போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இறுதியில் சிம்பாவே 6 விக்கெட் இழப்பிற்கு 142 ஓட்டங்கள் எடுத்தது.

தொடர்ந்து 143 ஓட்டங்கள் இலக்குடன் அயர்லாந்து அணி விளையாட இருந்தது .

இந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்ட காரணத்தினால் ஆட்டம் மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது . மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 1-0 என சிம்பாவே அணி தொடரை கைப்பற்றியது.