3 நாட்களுக்கான மின் துண்டிப்பு அட்டவணை

0
89

இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, (20, 21, 22) மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.