37,000 மெட்ரிக்தொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று இலங்கை கடற்பரப்பை அண்மித்துள்ளதாக எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பலுக்கான பணம் இதுவரை செலுத்தப்படவில்லை என்றும் அதற்கான கட்டணத்தை செலுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் குறித்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.