தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் இதுவரை 40 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10 இலட்சம் பேருக்கு டெங்கு நோய் பரவிய நிலையில் தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது.
மேலும், அவர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். எனவே, டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பொதுமக்களுக்கு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் டெங்கு நோயினால் 1,937 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2,345 டெங்கு மரணங்கள் சந்தேகத்தின் பேரில் விசாரணையில் இருப்பதாகவும் பிரேசில் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ் ஆண்டு காலநிலை மாற்றம் மற்றும் டெங்கு வைரஸின் பல சுழற்சி போன்ற காரணிகளால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.