வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த 494 கிலோ 48 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள், புத்தளம் – பாலாவி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரியூட்டல் நிலையத்தில் நாளைய தினம் எரியூட்டி அழிக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்திலிருந்து குறித்த போதைப்பொருள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. அதன் பின்னர், அவற்றை விசேட காவல்துறை பாதுகாப்பின் கீழ் கொண்டு சென்று எரியூட்டி அழிப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.