5 மாடிக் கட்டிடத்தில் பாரிய தீ !20 நிமிடங்கள் காத்திருந்து உயிர் தப்பிய நபர் !

0
126
குருணாகல் சதுரஷ மாவத்தையில் 5 மாடிக் கட்டடத்தில் இன்று முற்பகல் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.குருணாகல் மாநகர சபையின் 2 தீயணைப்பு வாகனங்கள், 6 தண்ணீர் பௌசர்கள் மற்றும் மத்திய அதிவேக வீதியின் தீயணைப்பு வாகனமொன்றும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டன.கடும் முயற்சியின் பின்னர் ஒரு மணித்தியாலத்திற்குள் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.தீ பரவும் சந்தர்ப்பத்தில் 3ஆம் மாடியில் ஒருவர் சிக்கியிருந்ததுடன் அங்கிருந்தவர்களின் முயற்சியின் பலனாக அவர் கீழே நிறுத்தப்பட்டு அதில் குவிக்கப்பட்டிருந்த மெத்தைகள் மீது குதித்து உயிர்தப்பினார்.தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக குருணாகல் தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.