மழையுடனான காலநிலை காரணமாக, 5 மாவட்டங்களுக்கு நேற்று விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று பிற்பகல் 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாத்தளை, கேகாலை, குருநாகல், கம்பஹா மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.