மாத்தறை – தொட்டமுன பகுதியில் நேற்று இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் 55 வயது மதிக்கத்தக்கவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சடலம் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.