64 வயது பெண் ஒருவர் மன்னா கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக பண்டாரகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலானது பண்டாரகமை , சமரநாயக்கபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் ஒன்றரை அடி நீளமுடைய மன்னா கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரும் காயமடைந்த பெண்ணும் அருகருகே அமைந்துள்ள வீடுகளில் வசித்து வந்த நிலையில் குறித்த பெண் சந்தேக நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை திட்டியதால் சந்தேக நபர் , பெண்ணை மன்னா கத்தியால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாக்குதலானது காயமடைந்த பெண் நடத்திவரும் கடைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பெண்ணின் தலை மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.