29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

65 உறுப்பினர்களே மக்களுக்காக நாடாளுமன்றில் செயற்படுகின்றனர்: இரா.சாணக்கியன்

ராஜபக்சக்களுடன் 148 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதும் உள்ளனர் என்றும், 65 பேர் மட்டுமே மக்களுடன் ராஜபக்சக்களுக்கு
எதிராக செயற்படுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்
தெரிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற்ற பின்னர், உரையாற்றும் போதே இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்தார்.
‘ நாடாளுமன்றில் நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை தெரிவு செய்வார்களென நான் நினைக்கவில்லை.
ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிற்கு வாக்களித்து, அவரை பிரதி சபாநாயகராக தெரிவு செய்த 148 பேரும் தற்போதும்
ராஜபக்ஷக்களுடனேயே உள்ளனர்.
எனவே, அவரை எதிர்த்து போட்டியிட்ட இம்தியாஸ் பாக்கிர் மார்க்கருக்கு வாக்களித்த 65 பேர் மட்டுமே மக்கள் பக்கம் உள்ளனர்.
நாடாளுமன்றத்தில் என்ன நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் இங்குள்ள நாடககாரர்கள், பொய்யர்கள் அதற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்றும் ஏனென்றால் அவர்கள் ராஜபக்ஷக்களை காப்பாற்றவே செயற்படுவார்கள் என்றும், இரா.சாணக்கியன் எம்.பி
தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles