69 இலட்சம் மக்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு வழங்கிய மிக முக்கிய மக்கள் ஆணையை கேள்விக்கு உட்படுத்தாமல் அதனை பாதுகாப்பதற்கான முயற்சிகளையே 11 கட்சிகளும் இணைந்து முன்னெடுத்து வருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (13) ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கமானது வேறு திசை நோக்கி பயணிக்கும்போது அதனை தடுப்பதற்காக நான் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட 11 கட்சிகளும் அமைச்சரவையில் பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டோம்.
அரசாங்கத்தை நல்வழியில் கொண்டு செல்வதற்காக பாரிய முயற்சிகளை மேற்கொண்டோம்.
69 இலட்சம் மக்களின் எதிபார்ப்புக்களையும் இந்த அரசாங்கத்தின் மூலம் நிறைவேற்றுவதற்கு நாம் முயற்சித்தோம்.
எனினும் மக்களின் ஆணையை கேள்விக்கு உட்படுத்த முயற்சித்தன் காரணமாகவே 11 கட்சிகளும் ஒன்றிணைவதற்கு காரணமாக அமைந்தது.
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தொடங்கினோம். இன்றைய நிலையில் பாராளுமன்றத்தில் அரசாங்கக் கட்சிக்கு 108 பேரே ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.