இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட 1000 ரூபா நினைவு நாணயக் குற்றிகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இன்று முதல், குறித்த நாணயமொன்றினை 6,000 ரூபா என்ற விலையில் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், ஒருவருக்கு ஒரு நாணயம் மட்டுமே விற்பனை செய்யப்படுமெனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.