பாணந்துறையில் உள்ள வீட்டொன்றிலிருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 82 கையடக்கத் தொலைபேசிகளுடன் வீட்டின் உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைமை ஆய்வாளர் மற்றும் பிற அதிகாரிகள் இன்று காலை நடத்திய சோதனையின் போது பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான 82 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்