நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினர் எவ்விதமான இடையூறுகளும் இன்றி, நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வகையில், நாடாளுமன்றத்துக்கு செல்லும் அனைத்து வழிகளிலும் மூடப்படும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்றும் நாளையும் பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக கிடைத்த தகவல்களுக்கு அமையவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.