27.1 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் சந்தேகம் உள்ளது- இரா.சாணக்கியன் எம்.பி

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை போன்றதொரு நெருக்கடியை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கெனவே எதிர்கொண்டு விட்டனர். எனவே அந்த மக்கள் எதிர்கொண்ட சவாலை தெற்கு மக்களும் எதிர்கொள்ள இடமளியோம் என்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சபாநாயகரை சந்தித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்துரைத்த அவர்,

பாராளுமன்ற அமர்வு நடைபெறாத 10 நாட்களுக்குள் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி நாட்டில் ஜனாதிபதி என்ன செய்ய போகின்றார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அந்த சந்தேகம் தொடர்பில் சபாநாயகருக்கு தெரியப்படுத்துவதற்காகவே அவரை சந்தித்தோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles