ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்கொண்டுள்ள சவால்களிலிருந்து அவரை மீட்டெடுப்பதற்கும் பங்கர்களில் மறைந்து இருந்த ஏனைய ராஜபக்ஷர்களை மீட்டெடுப்பதற்காகவுமே தற்போதைய சர்வகட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (22) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது சர்வகட்சி அரசாங்கமா உருவாக்கப்பட்டுள்ளது?
பிரதமர் ரணில் விக்கிரமங்க சகல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியா இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.