எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பட்டதுவ, காலி பிரதேசத்தை சேர்ந்த 21 வயது இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏனைய வாகன சாரதிகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தமாறு பொலிஸ் அதிகாரி கூறியபோது மோட்டார் சைக்கிள் செலுத்துனர் பொலிஸ் அதிகாரியிடம் முறுகலில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது பொலிஸ் அதிகாரியின் சீருடைக்கும் அவர் சேதம் விளைவித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.