1978ல் ஏற்பட்ட ஜே.ஆர் – இந்திரா முரண் மருமகன் ரணி லின் காலத்திலும் தொடருமா? தென் ஆசியாவும், ஆசியாவும், இலங்கை, இந்திய, சீன, அமெ
ரிக்க அரசியல் நகர்வுகளும், ரணிலின் திரிசங்கு நிலையும்.
ஹம்பாந்தோட்டை துறை முகம் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சீன கப்பல்
தொடர்பில் வாதப்பிரதிவாதங் கள் தொடர்கின்றன.
சீனாவின் ஆய்வுக் கப்பலான Yuan Wang 5 எனும் கப்பல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11
ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மிக்கவுள்ள தாக கூறப்படுகிறது.
சீனாவின் சியாங் துறைமுகத் திலிருந்து கடந்த 13 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்த கப்பல், சீனாவின் கிழக்கு கடலில் தற் போது பயணித்துக்கொண்டிருக் கிறது.
ஹம்பாந்தோட்டை துறை முகத்திற்கு சென்று, அங்கு தனக்கான வசதிகளை ஏற்படுத்
திக்கொண்டதன் பின்னர் இந்த சீனக் கப்பல் இந்திய பெருங்கட லில் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்
டுள்ளன.
அதனால், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளா தார நடவடிக்கைகளில் தாக்கம்
செலுத்தும் சகல விடயங்கள் தொடர்பிலும் மிகுந்த அவதானத் துடன் செயற்படுவதாகவும், கண்காணித்து வருவதாகவும், பாதுகாப்பை உறுதிப்படுத்த எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு தயாராக இருப்பதா கவும், இந்திய வெளிவிகார அமைச் சின் செய்தித் தொடர்பாளர் அரிந் தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
எனினும் இதற்கு உடனடி யாகவே எதிர்வினை ஆற்றியுள்ள சீனா, தமது சட்டபூர்வமான கடல்சார் நடவடிக்கைகளில் “சம்பந்தப்பட்ட தரப்பினர்” தலையிடமாட்டார்கள் என தாம் கருதவதாக எச்சரித்துள்ளது.
இதேவேளை இலங்கையின் உட்கட்டமைப்பிற்கு வெளிப் படைத்தன்மையற்ற கடனுத
வியை வழங்கியமையே இலங்கை யின் தற்போதைய நெருக்கடிக் கான முக்கிய காரணி என சமந்தா பவர் (samantha power – Administrator of the United States Agency for International Development) அண்மை யில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்டிருந் தார்.
இதற்கும் உடனடியாக பதில ளித்துள்ள சீனா, தமது முதலீடுக ளினால் இலங்கையின் பொருளா தார அபிவிருத்தி வேகமான, மேம்பட்ட நிலையை எட்டியுள் ளதாக கூறியுள்ளது.
குறிப்பாக சீனாவுக்கும் இலங் கைக்கும் இடையிலான நடை முறைரீதியிலான ஒத்துழைப்பு, அனைத்து சந்தர்ப்பங்களிலும் விஞ்ஞான ரீதியாகவும் திட்ட மிட்ட வகையிலும் முன்னெடுக் கப்படுவதாகவும், இந்த முதலீடு களில் அரசியல் தலையீடு இல்லை எனவும் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாஓ லிஜியேன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச மூலதன சந்தை மற்றும் பல்வேறு அபிவிருத்தி வங்கிகள் வழங்கிய கடனுத
வியை விட சீனாவின் வெளிநாட் டுக் கடன்கள் மிகக் குறைவானது.
இலங்கை மக்களின் வாழ்க் கைத் தரத்தை உயர்த்துவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் குறைந்த வட்டியிலும் நீண்ட கால அடிப்
படையிலும் குறித்த கடன் வழங் கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், அமெரிக்கா வினால் மேற்கொள்ளப்பட்ட வட்டி வீத அதிகரிப்பினால்,
இலங்கை போன்ற பல வளர்ச்சி யடையும் நாடுகள் பாதிக்கப்பட் டுள்ளது எனவும் . சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாஓ லிஜியேன் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு தென் னாசிய – ஆசிய பிராந்திய வல்லா திக்க போட்டியில் புதிய ஜனாதி பதி ரணில் விக்கிரமசிங்க சிக்கி யுள்ளாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அண்மையில் இலங்கை நாடாளுமன்றில் இட்பெற்ற ஜனாதிபதி தெரிவில் இந்தியா
வின் செல்வாக்கு நிலவியதாக வும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸா ஜனாதிபதியாவதனை இந்திh விரும்பியதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
இது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் இருந்து வெளிவந்த சர்ச்சைக்குரிய கருத்து கள் குறித்தும் இந்தியா தனது மறுப்பை தெரிவித்திருந்தது.
இவை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் அதிருப்தி அடைந்திருந்ததாக
வும், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருடன் இது குறித்து பேசியதாகவும் உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் வெளி யாகி இருந்தன. இவ்வாறான ஒரு சூழலில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீனாவுடனான அண்மைய நெருக்கம், இந்தியா
வுக்கான ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம் எனவும் கருதப்படு கிறது.
ரணிலின் மாமனாரான ஜே.
ஆர் ஜெயவர்த்தன 1978ல் தென்னாசிய பிராந்திய சார்க் கட்டமைப்பில் இருந்து
தென்கிழக்காசிய கட்டமைப் பான ஆசியானுடன் ஏற்படுத்திக் கொண்ட நெருக்கமும், மேலைத் தேய சார்பும், ஜே.ஆரின் தடி யூன்றிப் பாய்தல் நடவடிக்கை என அன்று விமர்சனங்கள் எழுத்திருந்தன.
அந்த நிலை ஜே.ஆருக்கும் அப்போதைய பிரதமர் மறைந்த இந்திராகாந்திக்கும் இடையி லான நேரடி மோதலுக்கு வழி வகுத்தது. அதுமட்டுமல்லாது ஈழ விடுதலை இயக்கங்கள் இந்தியாவில் காலூன்றுவதற்கும் ஜே.ஆர் – இந்திரா முரண்பாடு வழியமைத்தது.
மீண்டும் 2022ல் அவ்வாறான தொரு முரண் நிலை இலங்கை இந்தியாவுக்கிடையில் ஏற்படுமா என்ற அச்சம் தென்னாசியாவை சூழ்ந்துள்ளது.
- நடராஜா குருபரன்.