இந்தியா – கேரளாவில் கனமழை: 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

0
267

இந்தியா – கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. கேரளத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையும், 2 மாவட்டங்களுக்கு ஓரேஞ்சு நிற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து, பல ஓடைகள் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகிறது. கேரளத்தில் கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். மாநிலத்தில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.