கொழும்பில் சுற்றிவளைப்பு: 4 மணிநேரத்தில் 32 பேர் கைது!

0
199

பிலியந்தலை பிரதேசத்தில் இன்று 4 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 12 சந்தேக நபர்கள் உட்பட 32 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த குழுவில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு பெண் உட்பட 3 பேர் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனைய சந்தேக நபர்களில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவுடன் 17 பேர் உள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் 12 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரையான நான்கு மணித்தியாலங்கள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், பிலியந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சனத் ரஞ்சித் தலைமையிலான குழு உட்பட 5 குழுக்கள் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.