சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான மரப்பாலம் தீயில் எரிந்து நாசம்

0
163

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான மரத்தில் உருவான கலைநயமிக்க நீண்ட பாலம் ஒன்று எரிந்து சாம்பலாகியுள்ளது.
சீனாவின் கிழக்கே புஜியான் மாகாணத்தில் பிங்னன் கவுண்டி பகுதியில் சாங் வம்சம் ஆட்சி செய்த (960-1127) காலகட்டத்தில் மரத்தில் உருவான நீண்ட மரப்பாலம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. இது 98.3 மீட்டர்கள் நீளம் கொண்டது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த மரப்பாலம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி அறிந்ததும் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி நடந்தது. 10 மணிநேர போராட்டத்திற்கு பின்பு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
எனினும், முதல் 20 நிமிடத்தில் தீயில் எரிந்ததில் மரப்பாலம் கீழே விழ தொடங்கியுள்ளது. நீண்ட,வளைவுகளை கொண்ட இந்த பாலம் இயற்கை பேரிடரில் எரிந்திருக்காது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த தீ விபத்து மனிதர்களின் தொடர்பினால் ஏற்பட்டிருக்க வேண்டும். நீரின் மேல் அமைந்த அந்த பாலம் தொடர்ச்சியாக தீப்பிடித்து எரிந்திருக்கிறது என்பது மிக அரிது. அதன் தனித்துவ மரஅமைப்பு, உள்ளிட்டவற்றை கவனிக்கும்போது, தீயால் சேதமடைந்திருக்கும் என்பதில் சந்தேகம் வலுக்கிறது என குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.