ஐக்கிய மக்கள் சக்தியின் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற கலவரங்களின் பின்னணியில் செயற்பட்டார்; என்ற குற்றச்சாட்டிலேயே பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர்.
கொழும்பு பிலியந்தலை பிரதேசத்தில், கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற கலவரங்களுக்கு முன்னின்று செயற்பட்டார் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் இடம்பெற்ற ஆறு கலவர சம்பவங்களுக்கு முன்னின்று செயற்பட்டவர் என்றும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.