பெண்கள் வன்முறையால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகரிப்பு: சனத்தொகை நிதியம்

0
163

உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து சவால்களால் பிரசவம் என்பது உயிருக்கு ஆபத்தானதாகியுள்ளது. இலங்கையின் 20 இலட்சம் பெண்கள், யுவதிகளுக்கு உயிர்காக்கும் சுகாதார சேவையை வழங்க 10.7 மில்லியன் டொலர் தேவை என ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 2022 மே மாதத்தில் ஐ. நா. மேற்கொண்ட ஆய்வுகள் பெண்கள், யுவதிகள் வன்முறையால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகரிப்பதை வெளிப்படுத்துகின்றன. இதேவேளை பொலிஸ் தங்குமிடம், அவசர உதவி அழைப்புகள் போன்றவை போதிய வசதியின்மையால் பாதிக்கப்படுகின்றன. இலங்கை எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடி பெண்கள், யுவதிகளின் சுகாதாரம் உரிமைகள் மற்றும் கௌரவத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு பதிலளிப்பது மற்றும் உயிர்காக்கும் சுகாதார பாதுகாப்பு சேவைகளுக்கான அணுகலை பாதுகாப்பதாகும் என ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நட்டலியா கனெம் தெரிவித்துள்ளார்.