சர்வகட்சி அரசில் த.தே.கூட்டமைப்பு இடம்பெற வேண்டும்: டலஸ் அழகப்பெரும

0
179

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமையவிருக்கும் சர்வகட்சி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன உள்ளடக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும் என சுயாதீன அணியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பின்போது தான் இந்த விடயத்தை அவரிடம் வலியுறுத்தியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. இதே போன்று மக்கள் விடுதலை முன்னணியும் முக்கியமான கட்சியாகும். எனவே, இந்த இரண்டு கட்சிகளும் நிச்சயமாக சர்வகட்சி அரசில் இடம்பெற வேண்டும் என்பதை நான் மிக முக்கிய காரணியாக ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினேன். இந்த இரண்டு கட்சிகளும் நிச்சயமாக சர்வகட்சி அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்வது அத்தியாவசியம் என்பதே எனது நிலைப்பாடாக இருக்கின்றது என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.