சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

0
159

நுவரெலியா, பொகவந்தலாவை பெட்ரோசோவத்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று, பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெட்ரசோ, பொகவந்தலாவை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 51,57 மற்றும் 63 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பின் போதே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மாணிக்கக்கல் அகழ்வுக்காகப் பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.