27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வீடொன்றிலிருந்து 15 இலட்சம் ரூபா பெறுமதியான திருடப்பட்ட நகைகள் மீட்பு!

காலி மீட்டியகொட பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான தங்க நகைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பத்தேகம – ஹல்பதொட்ட பகுதியில் நேற்று இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கடந்த 2ஆம் திகதி மீட்டியகொட – அளுத்வல பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து திருடப்பட்டிருந்த சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. 8 தங்க வளையல்கள், 5 கழுத்தணிகள், 3 மோதிரங்கள், 3 ஜோடி காதணிகள் மற்றும் 4 கையடக்கத் தொலைபேசிகளுடன் 31 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பத்தேகமவில் உள்ள அடகுக் நிலையம் ஒன்றில் இரண்டு தங்க நகைகளை அடகு வைத்துள்ளதையும் பொலிஸார் கண்டுபிடித்தனர். இந்தச் சம்பவத்தில் வேறு நபர்களும் தொடர்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles