முல்லைத்தீவு செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான தூபியில் நினைவேந்தல் நிகழ்வு, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவுருவ படத்திற்கு சுடரேற்றப்பட்டதோடு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஒரு நிமிட அகவணக்கமும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜகுமார் செஞ்சோலைப் படுகொலை தொடர்பான நினைவுரையை ஆற்றினார். யாழ் பல்கலைக் கழக மாணவ ஒன்றியத்தின் பிரதிநிதிகள், மாணவர்கள், பலகலைக் கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் நினைவேந்தலில் கலந்துகொண்டனர்.