வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் 26 வயதுடைய சந்திரபாலசிங்கம் பிரதாபன் என்ற இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றைய தினம் குறித்த இளைஞரின் வீட்டின் கிணற்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டதுடன் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெடுங்கேனி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.