27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கலஹா பிரதேசத்தில் நபரொருவர் கழுத்து வெட்டி படுகொலை

கண்டி கலஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெல்வுட் பிரதேசத்தில், நபரொருவர் கூரிய ஆயதமொன்றினால் கழுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெல்வுட் ஜனபதய பிரதேசத்தை சேர்ந்த 45 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் என்றும் நேற்று இரவு தனது நண்பர்களுடன் மதுபானம் அருந்தியுள்ளார் என்றும் இதன்போது ஏற்பட்ட முறுகலின்போதே குறித்த நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

படுகொலையுடன் தொடர்புடைய 40, 52 வயதுகளையுடைய இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரேதப் பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles