அம்பாறை எரிபொருள் நிலையங்களில்
மீண்டும் மக்கள் ஒன்றுகூடல்

0
212

அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது மருதமுனை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் பெற்றோல் எரிபொருளை பெறுவதற்காக அதிகளவான மக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.

மேலும் நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதை அடுத்து மக்கள் எரிபொருளை பெறுவதற்காக ஒன்று கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த காலங்களில் கியூ.ஆர் முறைமையினால் சீராக எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்ட போதிலும் தற்போது மக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதால் எரிபொருளை வழங்குவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.