விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்றைய தினம் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.இலங்கையின் மிக உயர்ந்த 64 அடி உயர சுதைவிக்கிரக இராஜ கோபுரத்தினை கொண்டுள்ள மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியாகிய இன்று விசேட பூஜைகள் நடைபெற்றன.
காலை மகா கணபதி ஹோமமும் அதனைத் தொடர்ந்து விசேட அபிசேக அலங்கார பூஜைகளுடன் உற்சவ மூர்த்தி அடியார்கள் அபிசேகம் பண்ணும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதுடன் வசந்த மண்டப பூஜையும் நடைபெற்றது.நாளை காலை ஆலயத்தில் மகா கணபதி ஹோமத்தின் போது வைத்து பூஜிக்கப்பட்ட களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை கரைக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.