முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் கந்தையா சிவநேசன் ஆகியோரிடம், பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.ஆதி சிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள, தொல்லியல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள, முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில், பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், வினோ நோகராதலிங்கம், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் கந்தையா சிவநேசன் உள்ளிட்டவர்கள் இடையூறாக இருப்பதாகவும், தாம், குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எடுத்த முயற்சிக்கு, இவர்கள் இடையூறாக இருந்ததாகவும், குருந்தூர் மலையில் இருக்கின்ற பௌத்த பிக்குகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடு செய்துள்ளனர்.அந்த முறைப்பாட்டின் பிரகாரம், கடந்த சில தினங்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை, தொலைபேசியில் தொடர்புகொண்ட முல்லைத்தீவு பொலிஸார், இன்று, முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்திற்கு, வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். அந்தவகையில், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் கந்தையா சிவநேசன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் யூட் நிக்சன் ஆகியோர், இன்று, பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நிலையில், அவர்களிடம், மிக நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், வாக்குமூலம் பெற்று, கையொப்பம் பெற்றுள்ளனர். இருப்பினும், பொலிஸ் விசாரணைக்கு, முல்லைத்தீவு பொலிஸாரால் அழைக்கப்பட்டிருந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர், இன்று செல்லவில்லை.
Home முக்கிய செய்திகள் குருந்தூர் மலை விவகாரம்: வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களிடம் முல்லைத்தீவு பொலிஸார், வாக்குமூலம்!